ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

🔥🔥ஶ்ரீசீரடி பகவான் எவ்வாறு தன்பக்தர்களை மிகுந்த தாய்மையுணர்வுடனும், கருணையுடனும், சத்திய அன்புடனும் வழிநடத்தினார் என்பதனை இங்கே பார்ப்போம்...🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச  பொன்மொழிகள்..🙏🙏🙏

🔥ஶ்ரீசீரடி பகவான் எவ்வாறு தன்பக்தர்களை மிகுந்த தாய்மையுணர்வுடனும்,கருணையுடனும், சத்திய அன்புடனும் வழிநடத்தினார் என்பதனை இங்கே பார்ப்போம்...🔥

ஒருநாள் மத்தியானம் ஆரத்தி முடித்தபிறகு அடியார்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள்...அப்போது பாபா கீழ்கண்ட அழகான அறிவுரையை விடுத்தார். அது என்னவென்றால், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் இருங்கள்....என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்..ஆனால் இதை நன்றாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.... 

நீங்கள் செய்வது அனைத்தும் எனக்குத் தெரியும்....நானே அனைவருடைய அந்தரங்க ஆட்சியாளனாக இதயத்தில் அமர்ந்து இருக்கிறேன்...இந்த உலகின் கண் அசையும் - அசையா சர்வ ஜீவராசிகளையும் அரவணைக்கின்றேன்..இப்பிரபஞ்சமென்னும் தோற்றத்தை நானே கட்டுப்படுத்துபவன், ஆட்டுவிப்பவன், எல்லா வர்க்கங்களின் மூலமாதா நானே.. முக்குணங்களின் கூட்டுறவும் நானே...

நானே எல்லா உணர்ச்சிகளையும் உந்துபவன், படைப்பவன், காப்பவன், அழிப்பவனுமாம்... என்பால் கவனத்தை திருப்புபவர்களை  எந்தவிதமான துன்பம் விளைவிக்காது..ஆனால் மாயை, என்னை மறந்தவனை ஆட்டி உலுக்கும்... எல்லாப் பூச்சிகள், எறும்புகள், கண்ணுக்குத் தென்படுபவை...அசையக்கூடிய, அசைய முடியாத உலகம் எல்லாம் என்னுடைய சூட்சமப்  பேராற்றலின் உள்ளடங்கியுள்ளது என்பதை உணர்ந்து சரணாகதி அடைவீர்களாக...

ஓம் ஶ்ரீ சாய்ராம்....🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...