ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻

🔥🔥என்னிடம் வரும் பக்தர்களுக்கு உடனடியாக நான் வாரி வழங்கி விடுவதாகச் சொல்கிறார்கள். அது உண்மையல்ல. யாருக்கு நான் அனுக்கிரகம் (அருள்) செய்ய விரும்புகிறேனோ அவனை முற்றிலும் பரிசுத்தப்படுத்தி  அவனிடமிருந்து அனைத்தையும் பறித்து கொள்கிறேன்... அது ஐஸ்வர்யமாகவும்  இருந்தாலும் சரி, கர்ம  வினைகளாக  இருந்தாலும் சரி, அல்லது புண்ணியமாக இருந்தாலும் சரி. 🔥🔥

நானே கர்த்தா (காரணமாவேன்)  என்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, அதற்கு சாயி தான் கர்த்தா என்பதை புரிந்துக் கொண்டு என்னிடம் அனைத்தையும் ஒப்படைத்தால் நான் பார்த்துக்  கொள்வேன். இப்படியெல்லாம் செய்து, உன்னை முற்றிலுமாக என்னிடம் ஒப்படைத்து சரணாகதி செய்யும்போது, நான் நிரந்தரமாக உன்னிடம் தங்கி, உன் பிள்ளைகளை வளர்த்து, உன் பிரச்னைகளைப் போக்கி, உன் மனக் கவலையை தீர்த்து உனக்குள்ள அனைத்தையும் மாற்றி உன்னை இந்த உலகத்தில் நிம்மதியாகவும், உன் சந்ததியை வளமாகவும் வைப்பேன்...என் நாமத்தை உச்சரிப்பவர், என்னை வணங்குபவர், என் நிகழ்ச்சிகளையும், வாழ்வைப்பற்றியும் எண்ணி என்னை நினைவில் இருத்திக் கொள்பவர் ஆகியோர் உலகப் பொருள்கள், உணர்ச்சிகளில் கவனம் செலுத்த மாட்டார்.என் அடியவர்களை சாவின் வாயிலிருந்து இழுத்து விடுவேன்.....

ஸ்ரீ சீரடி  சாய்பாபா..🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...