ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...

ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🏻🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

🔥🔥எப்பொழுதும் புனிதமானதும் தூய்மை அளிப்பதுமான பாபாவின் கதைகளை மீண்டும் மீண்டும் படிப்போமாக. ! மீண்டும் மீண்டும் கேட்போமாக.. !🔥🔥

"ஸாயீயின் கருணை ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்படுவதை இந்தக் கதைகளை பயபக்தியுடன் கேட்பவர்கள் மட்டுமே உணர்வார்கள்.. ! ஆகவே நான் என்கின்ற அகந்தையின்றி சாய் சத்சரித்திரம்  பாராயணம் செய்வோமாக.....

இரவு பகலாக ஸாயீயை தியானம் செய்ய வேண்டும்....ஸாயீயைத் தவிர வேறு எந்த எண்ணமும் மனத்தில் நுழைந்து  விடாதவாறு விழிப்புடன் இருக்க வேண்டும்."..

"இறந்த காலத்தில் நடந்தது மனத்திலிருந்து அழிக்கப்படட்டும்.  எதிர்காலத்தின் எதிர்பார்ப்புகள் தள்ளி வைக்கப்படட்டும்."

"இவை இரண்டுக்கும் இடையே இருக்கும் நிகழ்காலம் ஸத்குரு ஸாயீபாபாவின் பாதங்களில் நிரந்தரமாக நிலையாக லயிக்கட்டும்.. !"

ஸாயீயின் சரித்திரம் ஆழங்காண முடியாத சமுத்திரம். அவருடைய கதைகளுக்கு உங்களுடைய கவனத்தைச் சிறிது நேரமாவது அளித்து,  செவிகளையும் செவிச்செல்வத்தையும் புனிதமாக்கி கொள்ளுங்கள்.. ! அஹங்காரம் அணுவளவும் இன்றி உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க ஆத்மானந்தத்தை அனுபவிப்பீர்கள் !"..

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...