ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் சாய்சரித்திர உபதேச பொன்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்....🙏🏼🙏🏼🙏🏼
🔥🔥நவவித பக்தி என்றால் என்ன... மற்றும் அதன் மூல சூட்சம விளக்கம் பற்றி இங்கே காண்போம்......🔥🔥
முதலாவதாக,...சிரவணம்..(சிரவணம் என்பது சாயீயின் பெருமையை கேட்டல்)....
இரண்டாவதாக,.. கீர்த்தனம் ( கீர்த்தனம் சாயீயின் லீலைகளைப் பாடுதல்),...
மூன்றாவதாக,... ஸ்மரணம் ( ஸ்மரணம் என்பது சாயீயைப் நினைத்தல்)....
நான்காவதாக..பாதசேவனம் ( பாதசேவனம் என்பது பாதங்களைக் கழுவுதல் அல்லது பிடித்து விடுதல்)...
ஐந்தாவதாக.,.அர்ச்சனம். ( அர்ச்சனம் என்பது மலர்களால் அர்ச்சனை செய்து பூஜித்தல்)...
ஆறாவதாக,..வந்தனம்.( வந்தனம் என்பது பணிதல், நமஸ்காரம் செய்தல், வணங்குதல்) இவ்வாறாக பொருள்படுகின்றது...
ஏழாவதாக, .தாஸ்யம் ( தாஸ்யம் என்பது அடிமைபோல் சாயீக்கு சேவை செய்தல்)...
எட்டாவதாக, சக்யம் ( சக்யம் என்பது சாயீயிடம் தோழமை கொள்ளுதல்)....
ஒன்பதாவதாக,ஆத்ம நிவேதனம் ( ஆத்ம நிவேதனம் என்பது தன்னையே சாயீக்கு அர்ப்பணம் செய்தல்)....
நவவித பக்திகளில் ஏதாவது ஒன்றையாவது பூரணமான பாவத்துடன் கடைப்பிடித்தால்.. வேறெதையும் வேண்டாத ஸ்ரீ சாயிபாபா, பக்தனுக்கு தம்மை வெளிப்படுத்துவார் என்பது திண்ணம்....
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🏼🙏🏼🙏🏼
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக