எமது குழந்தைகளே..உங்களைக் காப்பாற்றுவதற்காக யான் அவதரித்தவன்.. அவ்வாறு இருக்கும் போது ,யான் உணர்த்துகின்ற நடைமுறை கருத்துக்களை உள்வாங்கி அதன் வழி நடந்தால் போதுமானது... மேலும் என்னிடத்தில் எப்போதும் நம்பிக்கையும், பொறுமையும் கொண்டிருங்கள். குருவான நான் உங்களிடமிருந்து வேறெதையும் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை ..நான் உங்களை ஒருபோதும் புறக்கணிக்கவும் இல்லை. எப்போதும் உங்களைப் பாதுகாப்பேன் நான் உங்களுடனே சூட்சமமாக பின் தொடர்கின்றேன்..ஆனால் அதற்கு நான் கூறிய அறிவுரைகளைப் பின்பற்றி நடந்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்...எதனையும் பற்றில்லாமல் பார்க்க பழகிக்கொள்ள வேண்டும்..ஒரு சில சமயம் உங்களைப் பிரிந்து இருப்பேன் எனினும், உங்களிடம் யான் ஓருபோதும் அன்பின்மையையோ காட்டுவதில்லை.. தாய் ஆமையானது தனது இளங்குட்டிகள் தன் அருகில் இருப்பினும், தன்னை விட்டு நீங்கி ஆற்றின் அக்கரையில் இருப்பினும் , தனது அன்புப் பார்வையால் பேணி வளர்ப்பதைப் போன்ற அதேவிதமாக, நானும் உங்களை என் கண்ணோட்டத்தினாலேயே எப்போதும் பேணிப் பாதுகாப்பேன்..!
ஸ்ரீசீரடி சாய்பாபா....🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக