ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்...🙏🙏🙏
🔥🔥நான் உன்னுடன் இருப்பேன் என்று கூறுகின்றார் பாபா...பாபாவிற்கும் பக்தர் ரேகேவிற்குமான உரையாடல்...🔥🔥
பாபா : என் கஜானாவின் சாவி இப்போது உன் கைகளில்.எது வேண்டுமோ கேள்.மாதந்தோறும் ரூபாய் ஐந்து முதல் நூறு வரையோ அல்லது எது வேண்டுமோ,எதுவாயினும் நான் உனக்கு அளிக்கிறேன்....
பக்தர் (ரேகே) கேட்க மறுக்கிறார்.
பாபா :.. ஏதாவது கேள்....உனக்கு ஏதாவது கொடுக்க நான் ஆவலுடன் உள்ளேன்.
பக்தர் (ரேகே): நான் எது கேட்பினும் தாங்கள் கொடுப்பீர்கள் என் ஒத்துக் கொள்ளப்பட்டது தானே...?
பாபா : ஆம்....
பக்தர் (ரேகே): பாபா,அப்படியானால் நான் விரும்புவது இதுதான்.இப்பிறவியிலோ,இனி எனக்கு நேரக் கூடிய பிறவிகளிலோ,தாங்கள் என்னைவிட்டு பிரியக்கூடாது....எப்போதும் தாங்கள் என் கூடவே இருக்கவேண்டும்.
பாபா ; அப்படியே ஆகட்டும்.நான் உன்னுடன் இருப்பேன்.உன் உள்ளே இருப்பேன்,புறத்தே இருப்பேன்.நீ எப்படியிருந்தாலும்,என்ன செய்தாலும் அவ்வாறு இருப்பேன் என்று கூறுகின்றார்.....
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக