ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

திங்கள், மே 10, 2021

🔥🔥நான் உன்னுடன் இருப்பேன் என்று கூறுகின்றார் பாபா... பாபாவிற்கும் பக்தர் ரேகேவிற்குமான உரையாடல்...🔥🔥

 ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள் மற்றும் சுய விழிப்புணர்வு போதனைகள்...🙏🙏🙏

🔥🔥நான் உன்னுடன் இருப்பேன் என்று  கூறுகின்றார் பாபா...பாபாவிற்கும் பக்தர் ரேகேவிற்குமான உரையாடல்...🔥🔥

பாபா : என் கஜானாவின் சாவி இப்போது உன் கைகளில்.எது வேண்டுமோ கேள்.மாதந்தோறும் ரூபாய் ஐந்து முதல் நூறு வரையோ அல்லது எது வேண்டுமோ,எதுவாயினும் நான் உனக்கு அளிக்கிறேன்....

பக்தர் (ரேகே) கேட்க மறுக்கிறார்.

பாபா :.. ஏதாவது கேள்....உனக்கு ஏதாவது கொடுக்க நான் ஆவலுடன் உள்ளேன்.

பக்தர் (ரேகே): நான் எது கேட்பினும் தாங்கள் கொடுப்பீர்கள் என் ஒத்துக் கொள்ளப்பட்டது தானே...?

பாபா : ஆம்....

பக்தர் (ரேகே): பாபா,அப்படியானால் நான் விரும்புவது இதுதான்.இப்பிறவியிலோ,இனி எனக்கு நேரக் கூடிய பிறவிகளிலோ,தாங்கள் என்னைவிட்டு பிரியக்கூடாது....எப்போதும் தாங்கள் என் கூடவே இருக்கவேண்டும்.

பாபா ; அப்படியே ஆகட்டும்.நான் உன்னுடன் இருப்பேன்.உன் உள்ளே இருப்பேன்,புறத்தே இருப்பேன்.நீ எப்படியிருந்தாலும்,என்ன செய்தாலும் அவ்வாறு இருப்பேன் என்று கூறுகின்றார்.....

ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...