ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ.....🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்....🙏🙏🙏
எமது குழந்தைகளே...தினமும் எதையோ தேடி .. ஓடி கொண்டு இருக்கிறீர்கள்.. ஏகப்பட்ட கெடுபிடிகள்.நித்தம் ஒரு போராட்டம்.. ஒரு நாள் நிச்சயம் விடியும் என்று காத்திருக்கிறீர்கள்.. அப்பா நான் செய்த தவறை நான் உணர்கிறேன். தயவுசெய்து என்னை இதிலிருந்து விடுவித்து எனது கர்மாக்களை அடியோடு ஒழித்து என்னை காப்பாற்றுங்கள் என்று என்னிடம் வந்துள்ளீர்கள் அல்லவா சரிதானே?
மகனே..மகளே.. உங்கள் போராட்டங்கள் எனக்கு தெரியாதா? எப்போது நீங்கள் என்னை குருவாக ஏற்றுக் கொண்டீர்களோ, எப்போது எனது நாமத்தை உங்களது நாவில் உச்சரிக்க தொடங்கினாயோ, எப்போது நீ செய்த தவறை உணர்ந்து விட்டாயோ..அப்போதே உங்களது கர்ம வினைகளை போக்கி விட்டேன்...கவலைப் படாமல் இருப்பீராக எமது குழந்தைகளே.. அப்பா நான் இருக்கிறேன்..
பொருமையைக் கடைப்பிடிப்பீராக.. படிப்படியாக நீங்கள் நினைத்ததற்க்கு மேலாக உயரப் போகிறீர்கள்..நான் இருக்கிறேன்... கலங்காதீர்.. என்னிடம் அனைத்தையும் நம்பிக்கையோடு சமர்ப்பணம் செய்து விட்டு உங்கள் கடமைகளைச் சரியாகச் செய்யுங்கள். நான் விரைவில் தீர்வை வழங்குவேன்....
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்....🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக