ஓம் ஶ்ரீ சாய்நாதாய நமஹ...🙏🙏🙏
ஶ்ரீசீரடி சாய்பாபாவின் உபதேச அருள்மொழிகள்..🙏🙏
குருவின் முக்கியத்துவம் என்ன என்பதனை, தனது பக்தன் காகா சாஹேப் தீஷித்திற்கு பகவான் அறிவுருத்திய மறை ஞான சூட்சம உரை....🔥🔥
ஶ்ரீசீரடி பகவானின் அதி தீவிர பக்தர் காகா சாஹேப் தீஷித் என்பவர் ஆவார்...இவர் பகவானை சந்தித்து தான் சீரடியை விட்டுப்போக வேண்டுமா என்று கேட்கின்றார்...அதற்கு பாபா "ஆம்" என்று பதிலுரைக்கின்றார்...பிறகு "எங்கே போவது" என்று தீஷித் கேட்கின்றார்... பாபா "உயர... மேலே...!" போக வேண்டும் என்று கூறுகின்றார்...அதற்கு தீஷித் "வழி எப்படிப்பட்டது" என பாபாவிடம் கேட்கின்றார்...அதற்கு பாபா கூறினார், "அங்கே போவதற்குப் பல வழிகள் உள்ளன... இங்கிருந்தும் (சீரடியிலிருந்தும்) ஒரு வழி உள்ளது....பாதை கடினமானது...புலிகளும், ஓநாய்களும், வழியிலுள்ள காடுகளில் உள்ளன.... அதற்கு தீஷித் "ஒரு வழிகாட்டியை என்னுடன் அழைத்துச் சென்றால் என்ன...?" என்று கேட்கின்றார்....அதற்குப் பாபா கூறினார், "அப்போது கடினம் இல்லை.... புலி, ஓநாய், படுகுழிகள் முதலியவற்றிலிருந்து உன்னை விலக்கி, உன் குறிக்கோளை அடைய நேரடியாக அழைத்துச் செல்வார்...வழிகாட்டி இல்லையென்றால் காடுகளில் நீ காணாமல் போகலாம்... அல்லது படுகுழியில் விழும் அபாயம் இருக்கிறது."..
இப்போது தீஷித் உணர்கின்றார்....குருவின் முக்கியத்துவத்தை மறை ஞான விளக்கமாக, உவமானத்தோடு குருநாதர் அறிவுருத்தியதை உணர்ந்து தெளிகின்றார் தீஷித்.....
மேலும் குரு அவசியமா என்னும் விவாதத்திற்கு பாபாவின் பதிலே என்று ஏற்றுக் கொள்கின்றார்...ஒரு மனிதன் சுதந்திரமானவனா அல்லது கட்டுப்பட்டவனா என்னும் விவாதம் ஆன்ம விஷயங்களில் உபயோகமில்லை என்றும், இவ்வத்தியாயத்தின் மராத்தி மூலப்பதிப்பில் விளக்கப்பட்டபடி பெரிய அவதாரங்களான ராமர், கிருஷ்ணர், முதலியோர் தமது குருக்களான வசிஷ்டர், சாந்தீபன் ஆகிய முனிவர்களிடம் தன்னையறிவதற்காக சரணடைந்தார்கள் என்றும், குருவினுடைய உபதேசத்தினாலேயே பரமார்த்திகம் அடையப்படுகிறது என்றும், நம்பிக்கையும், பொறுமையுமே அத்தகைய முன்னேற்றதிக்குத் தேவையான நற்பண்புகளாம் என்பதுதான் பாபாவின் திருக்குறிப்பாகும் என்பதை அறிவோமாக...
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக