ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

வெள்ளி, செப்டம்பர் 15, 2023

எங்கு இருந்தாலும், எந்தப் பிறவியெடுத்திருந்தாலும் பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஒரு நியதி இருக்கிறது .


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த உபதேச பொன்மொழிகள்.....🙏🏻🙏🏻

வண்டு அங்குமிங்கும் பூக்களைத் தேடி அலைவது போல ஆழமான மடுவிலும், மக்கள் நடமாட்டமில்லாத கொடிய காட்டிலும், பரந்த மலையிலும் (உம்மை) தேடிப் புகுந்து அலைகிறான் அறிவில்லாத மனிதன்.... உமையின் மணாளா..! 🙏🏻

உமக்கு மனமாகிற ஒரே ஒரு தாமரையைச் சமர்ப்பித்துவிட்டு, இங்கங்கு அலையாமல் ஒரே இடத்தில் சுகமாக இருப்பதற்கு மனிதன் அறிந்துக் கொள்ளவில்லையே..! என்னே ஆச்சரியம்..!..எங்கு இருந்தாலும், எந்தப் பிறவியெடுத்திருந்தாலும் பக்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதில் ஒரு நியதி இருக்கிறது . அதுதான் அவனது மனநிலையைப் பற்றியது....

சரணடைய வேண்டும் என்ற ஆவல் மட்டும் ஒருவனுக்கு இருந்தால் போதாது. அதைச் செய்து, அது நீடித்து நிற்பதற்கு அவனது மனநிலை பக்குவப்பட்டிருக்க வேண்டும். உலக வாழ்வில் அல்லல்பட்டு, ஏற்றம் இறக்கம் எல்லாம் கண்டு அனுபவித்த ஒருவனுக்கு பக்தி செய்து சரணடைவது என்பதும், தொடக்கத்தில் மற்றும் ஒரு உலகியல் செயல் போலத்தான் தோன்றும். ஏனென்றால் அவன் அப்படியொரு பழக்கத்திற்கு அடிமை போல் ஆகிவிட்டான். அதனால் மற்ற செயல்களைப் போலவே அதையும் நினைத்துக்கொண்டு வெவ்வேறு விதமான பூக்களைக் கொண்டு ஆராதிப்பது என்பது ஒரு வழக்கம் என்பதால் அவன் எங்கெங்கோ போய் கஷ்டப்பட்டு விதவிதமான பூக்களையெல்லாம் தேடிக்கொண்டு வந்தால் பகவானுக்கு மிகவும் பிடித்திருக்கும் என்று நினைத்து அதைச் செய்ய முயல்கிறான். ஆனால் பகவான் விரும்புவதோ ஒன்றே ஒன்றைத்தான்.....

அதுதான் அவனது மனமாகிய தாமரைப் பூ. அதை அவரிடம் சமர்ப்பிப்பது ஒன்றே சரணாகதியின் முழு அடையாளம். அது தெரியாமல் இருக்கிறானே என்று அவர் ஆச்சரியப்படுவார்....இங்கு மனத்தை தாமரைப் பூவோடு ஒப்பு நோக்கியிருப்பது மிகவும் பொருத்தமானது ஆகும். பூஜை செய்யும்போது தாமரை மொக்கை ஒவ்வொரு இதழாகப் பிரித்து வரும் முழுத் தாமரைப் பூவை பகவானுக்குச் சமர்ப்பிப்பார்கள். அதாவது மனத்தை அப்படி சமர்ப்பிக்கவேண்டும் என்பது அதன் பொருள். ஏனென்றால் மனம் என்று தனியான பொருள் ஒன்று கிடையாது. ரமணர் “எண்ணங்களே மனம், யாவினும் நான் எனும் எண்ணமே மூலமாம்” என்று சொல்வார். 

அதாவது எண்ணங்களின் தொகுப்பே மனம்.... எண்ணங்கள் எல்லாவற்றிலும் முதல் எண்ணம் “நான்” என்னும் அகந்தை... அது பகவானை விட்டுவிட்ட தனியான “நான்” எனும் எண்ணம். அதை பகவானிடம் சமர்ப்பித்தால் மற்ற எண்ணங்கள் எல்லாமும் அவரிடம் தஞ்சம் ஆன மாதிரிதான். எண்ணங்கள் எதுவுமே தனியாக வராது. அலை அலையாகத் தான் கிளம்பும்.... ஒவ்வொன்றும் தாமரையின் இதழ்கள் போல ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவைதான்... அவை அனைத்தையும் கோர்த்து வைத்திருப்பது அந்த முதல் எண்ணமான அகந்தை. அதை பகவானிடம் கொடுத்து விட்டு, நிம்மதியாக இருப்பதை விட்டு, உலகில் உள்ள மற்ற பூக்களைத் தேடி பக்தன் ஏன் போக வேண்டும்..? அதற்கு அவசியமில்லை...உன்னிடம் உள்ளத் தாமரையைக் கொடுத்து விட்டு உள்ளதை உணர் என்று இங்கு உணர்த்தபடுகிறது...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...