ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

ஞாயிறு, செப்டம்பர் 17, 2023

திருவண்ணாமலையில் நீண்ட காலம் வாழ்ந்த ஒரு மகான்.

ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

கர்மாவிலிருந்து தப்ப வழி உள்ளதா..?

நிச்சயமாக இல்லை..! வணக்கத்துக்குரிய திரு. ராம் சுரத்குமார் யோகி அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..? அவரைச் சிரட்டைச் சாமியார் என்றும் அழைப்பார்கள்....

திருவண்ணாமலையில் நீண்ட காலம் வாழ்ந்த ஒரு மகான்...ஒருமுறை  மிக திறமையான மருத்துவர் ஒருவர்  திருவண்ணாமலை போன போது அவரைத் தரிசனம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது...அந்த மருத்துவர் போன போது அந்த மகான் கையில் இருந்த ஒரு புண்ணில் ஈக்கள் மொய்த்துக் கொண்டு இருந்திருக்கின்றன. அதைப் பார்த்த அந்த மருத்துவர் " I'm a Doctor by profession. If you permit me shall I clean this wound.. apply some medicine and dress it up,.? " என்று மிகவும் பணிவுடன் கேட்டிருக்கிறார்....அதற்கு அந்த மகான் பெரிதாகச் சிரித்து விட்டு.." you mean this..? Just see" என்று சொல்லி விட்டு தன் பக்கத்தில் வைத்திருந்த ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌சிரட்டையிலிருந்து ( கொட்டாங்கச்சி) சிறிது நீரைக் கையில் எடுத்து.. கண்ணை மூடி ஓரிரு நிமிடங்கள் ஏதோ ஜபம் செய்து விட்டு அந்தப் புண்ணின் மேல் தெளிக்க.. அது காணாமல் போய் விட்டதாம்..

அந்த மருத்துவருக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லையாம்....பிறகு மீண்டும் அதேபோல் இன்னொரு முறை அந்த மகான் செய்ய அந்தப் புண் திரும்பவும் அவர் கையில் தோன்றி விட்டதாம்...

" This is my Karma.. I have to bear it.. live and suffer with it.. " என்று சிரித்துக் கொண்டே சொன்னாராம் அந்த மகான்....பல சித்துகள் தெரிந்த இவரைப் போன்ற மகான்களால் தங்கள் நோய் எதுவானாலும் அதைக் குணப்படுத்திக் கொள்ள முடியாதா..?அதேபோல் வணக்கத்துக்குரிய மகான்கள் இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் ரமண மகரிஷி ஆகியோரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்கள் நினைத்திருந்தால் அதிலிருந்து மீண்டிருக்கலாம் அல்லவா ...? அதற்கு அவர்கள் முயற்சி எடுத்தார்களா ...? இல்லவேயில்லை.. ! ஏன்.. ? அவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.. " இது நமது கர்மா என்று.. நமது கர்ம வினைப்பயன்.. அதை நாம் அனுபவித்தே கழிக்க வேண்டும் "..

ஓம் ஶ்ரீ சாயீராம்....🙏🏻🙏🏻

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...