ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, செப்டம்பர் 30, 2023

கடவுள் அப்படிங்கிறது ஒரு பெயர்ச்சொல் இல்லை அது ஒரு வினைச்சொல்...!


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்..🙏🙏

🔥அணுவிலும் இயக்கத்திலும் சிவமே...குருவிலும் சாவமே... இறையே.....யாவரிலும் அவனின்றி எவரில்லை...நான் என்கிற பேதத்தில் அவனில்லை...நாமாகி போன இருமையைக் கடந்த ஒருமையில் அவனிருக்கிறான்...அனைத்திலும் அவனே...வேடத்தைப் போட வைத்தவுனும் அவனே...ஆகவே எவ்வேடத்தைப் போட்டாலும் அதனுடன் அறத்தைப் பொருத்துங்கள்.வாழ்வில் உயர்வது திண்ணம்..🔥

திடீர்னு அரசாங்கம் இனிமே தண்ணீரை யாரும் இனிமேல் தண்ணீர் என்று சொல்லக்கூடாது அப்படின்னு சட்டம் போட்டுட்டாங்க. நீங்க தாகம் எடுத்தா பெயர் மாற்றப்பட்ட அந்த திரவத்தை குடிப்பீங்களா அல்லது அதன் பெயர் மாத்திட்டதால இனிமே அதனை குடிக்க மாட்டேன் அப்படின்னு சொல்லுவீங்களா...? பேரென்ன வச்சாலும் தண்ணீர் தண்ணிதான். நீங்க தண்ணீர் என்று சொல்லுங்க, வாட்டர் என்று சொல்லுங்க, பாணி என்று சொல்லுங்க, நீலுண்ணு சொல்லுங்க, ஆனா தண்ணீர் என்னமோ ஒன்னு தான். பேர்ல என்ன இருக்கு உங்களுக்கு புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன்.

கடவுள் அப்படிங்கிறது ஒரு பெயர்ச்சொல் இல்லை அது ஒரு வினைச்சொல், அது ஒரு தன்மையை குறிக்கும் சொல். எங்கேயும் எப்போதும் ஏதோ ஒரு விதத்தில் கடவுள் தன்மை வெளிப்பட்டு கிட்டதான் இருக்கு. நாமதான் அதை புரிஞ்சுக்கணும். நீங்க சொன்னது போல என்ன பேர் வந்தாலும் வச்சுக்கோங்க. பேருல என்ன இருக்கு...?!

ஓம் ஶ்ரீ சாயீராம்..🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...