ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, செப்டம்பர் 30, 2023

உனக்கு புரிகிறதா...உண்மையின் உருவம்..!?

 


ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏

ஶ்ரீசீரடி சாயீபகவான் உதேசித்த பொன்மொழிகள்...🙏🙏

உனக்குப் புரிகிறதா...உண்மையின் உருவம்..!?

சாதனை அல்லது சாதனா என்பது ஒருவன் தனது சுயமுயற்சியுடன் தன்னை சுயகட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, சுய முன்னேற்றமடையச் செய்து, தெய்வ குணங்கள் உடையவனாக தன்னை உருமாற்றம் செய்யும் முயற்சி சாதனா எனப்படுகிறது. ஒருவன் சாதனா மூலம் மனப்பாங்கு எப்போதும் நேர் எண்ணங்கள் உடையதாகவும், மனம் விரிவடைந்து எல்லாவற்றையும் ஏற்று சிந்தித்து புரியும் ஆற்றல் உள்ளதாகவும், உயர்ந்த குணங்களை மனப்பண்புகளையும் உருவாக்கும் செயல்முறையை செய்கிறான்....

ஆக சுருக்கமாக சாதனை என்பது ஒருவன் தனது ஆளுமையில் தூய்மையை கொணர்ந்து, தனது செயல்கள் நேர்மையுடனும், உணர்ச்சிகளுலும் எண்ணத்திலும் ஞானத்துடனும், செய்கையில் தர்மத்துடனும் சரியான செயல்களை செய்யும் உள்ளவனாக மாறுதலே ஆன்மீகத்தின் அடிப்படை நோக்கம்...

இப்படி ஒருவன் செய்தால் அதுவரை தான் அல்லது நான் என்று அவன் எண்ணிக் கொண்டிருந்த வட்டம் விரியத்தொடங்கும்.... இதை உணர்வு சக்தி அல்லது சேதன சக்தி என்று சொல்லுவார்கள். இந்த உணர்வு சக்தி சாதரணமானவர்களில் நான் ராமன், இன்னாருடைய மகன், இந்த வேலை செய்கிறேன், இந்த ஜாதியை சேர்ந்தவன், என்ற அடிப்படையில் தாம் ஏற்படுத்திக்கொண்ட அபிமானங்களின் அடிப்படையிலேயே செயல்புரிகிறது. ஆனால் சாதனையால் தன்னை விரிவு படுத்திக்கொண்ட ஒருவனின் உணர்வு சக்தி மெதுவாக விரிவடைந்து பிரபஞ்ச உணர்வு சக்தியாக மாறுகிறது. தான் என்ற உணர்வை பிரபஞ்ச உணர்வாக விரிவடைய செய்யும் செயல் முறையே ஆன்ம விஞ்ஞானத்தின் இலக்காகும்...

ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏

ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...