ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏🙏
இறைவன் மனிதனைப் படைக்கும் போது தன்னுடைய ஒரு அம்சத்தை சேர்த்து (இறை அம்சம் = ஆத்மா) அதை லீலையாக அமைப்பதற்காக அந்த ஆத்மாவை சுற்றி மாயை என்ற (முக்குணங்கள்) ஆவரணத்தையும் சேர்த்தே படைத்தார். மனிதன் என்றால் இறை அம்சம் + மாயை. அவர் மனிதனுக்கு தன் ஆத்மாவை சுற்றியுள்ள மாயையாகிய ஆவரணத்தைக் களைந்து ஈஸ்வர ஸ்வரூபத்தில் இணையும் (ஆத்ம ஸ்வரூபம்) லட்சியத்தையும் வைத்தார். மனிதன் ஈஸ்வர ஸ்வரூபத்துடன் இணையும்போது அந்த ஜீவனின் லீலை பூரணமாகிறது. எல்லா மனிதர்களும் இறை ஸ்வரூபத்துடன் ஒன்றிய பின்பு ஜகத் லீலை பூரணமடைந்து கல்பம் முடிவு பெறுகிறது..
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக