ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🙏
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🙏
த்விதிய த்வை பயம் பவதி’....என்று ஒரு பழமொழி உண்டு...பயத்தின் காரணம் இரண்டாய் இருப்பது என்பதே இதன் பொருள். சுயத்தோடு ஒன்றாமல் இருப்பதே இரண்டாய் இருப்பதாக இங்கே குறிப்பிடப்படுகிறது.) தனக்குள்ளே தன் மெய்யுணர்வோடு ஒன்றாமால் இருப்பவர்கள் (அந்தர்முகி), உள்முகமாக நோக்கி தன் சுயத்தோடு ஒன்றாமல் இருப்பவர்கள்...இவர்களை உறுதியானவர்களாக கூறவே முடியாது. தாபங்களும், ஜூர வேகமும் (பரிதவிப்பு) கொண்டவர்களால் தமக்குள் சென்று சுயத்துடன் ஒன்றுவது என்பது முடியவே முடியாது..
ஒருவர் தமக்குள்ளே மையத்தில் இரு inக்கும் போது மட்டுமே பெரும் வலிமை பிறக்கிறது. அப்படிப்பட்ட வலிமை, தாபம் மற்றும் ஜூர வேகங்களினால் வரும் எதிர்மறை விளைவுகள் அற்றது, மேலும் இது அவற்றையெல்லாம் தாண்டியது. அது மட்டுமே உண்மையான வலிமை. இதனால் தான் ஸ்ரீகிருஷ்ண பகவான் சொல்கிறார், ‘எங்கெல்லாம் தூய வலிமையை பார்க்கிறீர்களோ, அது நான் என்று தெரிந்துகொள்....
ஓம் ஶ்ரீ சாயீராம்...🙏
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்..🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக