ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

புதன், டிசம்பர் 13, 2023

(தன்னை நன்கு அறிந்த விஞ்ஞானியான யோகி தன்னுடன் ஒன்றி இணைந்து உலகில் காணப்படும் எல்லாம் தன்னில் இருப்பதையும், ஒன்றேயான ஆன்மாவாகும் தானே எல்லாமாய் இருப்பதையும் தனது ஞானக் கண்ணினால் காண்பான் என்பதை உறுதியாக அறிந்துகொள்.)

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

தன்னை அறிந்த விஞ்ஞானியான யோகி தன்னுடன் ஒன்றி இணைந்து உலகில் காணப்படும் எல்லாம் தன்னில் இருப்பதையும், ஒன்றேயான ஆன்மாவாகும் தானே எல்லாமாய் இருப்பதையும் தனது ஞானக் கண்ணினால் காண்பான் என்பதை உறுதியாக அறிந்துகொள்.

இங்கு விஞ்ஞானி என்ற சொல் அனுபவத்தில் காண்பவன் என்ற பொருளைக் குறிக்கிறது. எப்போது ஒருவன் ஆன்ம விசாரம் செய்து அனுபவத்தில் தன்னைத்தான் நன்கு உணர்கிறானோ அப்போதே அவன் யோகியாகிறான். அவனுக்குத் தான் காணும் உலகில் உள்ள எல்லாமுமே, தான் காண்பதால், தன்னுள்ளே இருப்பதாகவும் தெரிகிறது. தன்னிருப்பைச் சார்ந்தே அனைத்தும் காணப்படுவதால் காணப்படும் அனைத்தும் தன்னைப் போலவே ஆன்ம மயமாய் இருப்பதாகவும் உணர்கிறான். இதுதான் யோகம் என்பதன் பொருளாகும்...

சாதாரணமாக ஒருவன் காண்பது என்றால் அங்கு காண்பவன்-காணப்படுவது-காட்சி என்ற முப்புடிகள் வருகின்றன. அது ஒருவனது ஊனக் கண்ணால் காணும் காட்சி. ஒரு யோகியானவன் எல்லாம் ஒன்றே என்று காண்பது அவனது ஞானக்கண் காட்சி. ஒரு யோகிக்கு அந்த சாதாரண ஊனக்கண் காட்சி கிடையாதா என்று கேட்டால் உண்டு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அப்படி அவன் பார்க்கும்போது பார்க்கப்படும் பொருளும் ஆன்மாவாகவே அவனுக்குத் தெரியும். அதாவது முற்றும் உணர்ந்த யோகிக்கும் உலகம் உண்டு; ஆனால் அது ஆன்ம வடிவாய்த் தெரியும். அதனாலேயே அவனைப் பொருத்தவரை எல்லோருமே ஞானம் அடைந்தவர்கள்தான்; சிலர் அதை அறிந்தவர்கள், வேறு சிலர் அதை அறியாதவர்கள்.....ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻


சாதாரணப் பார்வையில் எல்லோரும் வேற்றுமையைக் காண்கின்றனர்; யோகியோ அனைத்திலும் ஒற்றுமையைக் காண்கிறான். இந்த இரண்டையும் சம்ஸ்க்ருதத்தில் முறையே “பேத திருஷ்டி” என்றும் “அபேத திருஷ்டி” என்றும் கூறுவார்கள். இங்கு இந்த சித்தர் பாடலை நினைவு கூறுவது நல்லது: “கண்ணும் தானே, காணும் பொருளும் தானே; பேணும் அறமும் தானே, பேசா அனுபூதியும் தானே; எல்லாம் தானே, யாதும் அல்லாதானே”. அதாவது எதுவும் இல்லாதான் யாதுமாகி நிற்கின்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...