ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻🙏🏻
உலகத்திற்கும் சந்யாஸத்திற்கும் எந்த பிரச்சனையும் இல்லை.. சம்பந்தமும் இல்லை... சந்யாஸத்தால் துறக்கவேண்டியது உலகத்தை அல்ல, நம் அறியாமையைத்தான். உலகத்தைத் துறத்தல் சந்யாஸமல்ல. ஞானத்தை உணர்தல் சந்யாஸம். இந்த ஞானம் துறவறத்திற்கு இட்டுச்செல்லும். துறவறம் என்பது இங்கு உலகத்தை துறத்தலன்று. அதன் மீதான பற்றைத்துறத்தல். உலகம் எப்போதும் போல அங்கேயே இருக்கும், ஆனால் அதன் மீதான நமது பார்வை மாறிவிடும். ஞானத்தை அடைந்தவன் எதையும் துறக்க வேண்டியதில்லை...அவசியமில்லாததும், மிகுதியானவையும் தானாகவே அறுந்துவிடும். துறவறம் என்பதற்கும் உலகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது அகம் சம்பந்தப்பட்டது. அகத்தூய்மை அடைவது. நானென்பது இந்த உடல்மட்டுமல்ல, ஆத்மாவும் சார்ந்தது என்றுணர்வதனால், நமது அறியாமையும் பற்றும் அகல்கிறது...அதுவே முழுமையான ஆன்மீகம்...
ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக