ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

புதன், டிசம்பர் 20, 2023

மனிதன் தெய்வமாகலாம்...!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻

மனிதன் தெய்வமாகலாம்...!

பிரம்மம் தன்னிலிருந்து உலகங்களைப் படைத்து, படைக்கப்பட்டவை எல்லாம் தானேயாகிக் கடைசியில் வெளிப்படுத்தியவற்றையெல்லாம் தானே தனக்குள் இழுத்துக்கொண்டு விடுகிறது. எல்லாமே பிரம்மம். சர்வம் பிரம்ம மயம் எனில் நமக்கு எல்லாமே சொந்தம். இதைப் புரிந்துகொண்டு நிகழ்வன எல்லாம் அவன் செயலே என்ற ஞானம் நமக்குள் பதிந்துவிட்டால் பிறகு எதனாலும் பாதிப்பில்லை. இதற்கு நாம் நம்மை அவனுடன் இணைத்துத் தியானத்தால் ஒன்றிவிட வேண்டும். நான் அல்லாதவற்றை எல்லாம் துறந்து விட வேண்டும். நான் அவன்! அவன் நான்! நானே பிரம்மம்...!

இருண்டு கிடந்த அறைக்குள் ஒரு விளக்கை ஏற்றிய கணமே ஒளி பரவவுதைப் போல் இந்த ஞானம் இக்கணமே முழுமையாக நம்மில் ஏற்படவேண்டும். எல்லாம் நானே என்ற இந்த ஞானத்தை மனித மனதில் உருவாக்குவதற்காகத் தான் ஸ்ரீ கிருஷ்ணர், ‘‘அர்ச்சுனா! தண்ணீரில் நான் சுவையாக, சூரிய சந்திரனில் நான் ஒளியாக, வேதங்களில் பிரணவமாக, ஆகாயத்தில் ஒலியாக, மனிதர்களில் பேராண்மையாக, பூமியில் புனிதமான மணமாக, தீயில் சூடாக, எல்லா உயிர்களிலும் ஜீவசக்தியாக, தவ சீலர்களிடம் தவமாக இருந்து வருகிறேன்!” என்கிறார்...

ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...