ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

வியாழன், டிசம்பர் 21, 2023

பிரபஞ்ச பேறாற்றலின் வழியே உன்னை தேடு..!


ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻

ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻🙏🏻

பிரபஞ்ச பேறாற்றலின் வழியே உன்னை தேடு..!நீ என்னை வந்தடைவது ஏற்கெனவே விதிக்கப்பட்டிருக்கிறது. நம் சந்திப்பைத் தடுக்கும் சக்தி இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அறியாமையின் காரணத்தால் ‘தானே ஆன்மா’ என்ற நோக்கில் மனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது...இதனால் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு அது பல தடைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கிறது. ஆனால், மனத்தின் ஆற்றல் மிகவும் வரையறைக்குட்பட்டது. அதனால் ஒன்றும் செய்ய முடியாது...

நீங்கள் என்னை வந்து சேரும் நிகழ்வு ஏற்கெனவே முடிவாகிவிட்டது. ஆனால், அது எந்தவிதத்தில், எப்போது நடக்கும் என்பது ஓரளவுக்கு உன்னையும், ஓரளவுக்கு என்னையும் சார்ந்து இருக்கிறது. நீ எப்போது, என்ன செய்யப் போகிறாய் என்பதைப் பொறுத்தே நான் என்ன செய்வேன் என்பது முடிவாகும். ஒருவிதத்தில் சொல்லப்போனால் எல்லாம் உன் கையில்தான் இருக்கிறது...நான் எப்போதுமே உன்னைச் சேர்த்துக் கொள்வதற்கு ஆயத்தமாகத் தான் இருக்கிறேன்...இப்போதே கூட. நீதான் இன்னும் புரிந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் நான் உன்னோடுதான் இருக்கிறேன். அதனால் என்னிடம் பிரிவுணர்வு இல்லை.

நீ எவ்வளவு தான் அலைந்தாலும்  அலைந்துக் கொண்டிருக்கிறாய். உன் தாகம், உன் தாபம், உன் வேதனை, உன் பிரிவாற்றாமை, ஏக்கம், எதிர்பார்ப்பு, எப்போதாவது சிலகணங்களில் என்னைத் தூரத்து நறுமணமாக உணரும் கணங்களில் நீ அடையும் சந்தோஷம், எல்லாவற்றிலும் நான் இழைந்திருக்கிறேன். உனக்குள் எழும் ஒவ்வோர் எண்ணத்திலும், ஒவ்வோர் உணர்ச்சியிலும், ஒவ்வோர் உணர்விலும் உள்ளே நான் பொதிந்திருக்கிறேன்...நிரந்தரமான தீர்வு...!

உனக்குள்ளிருந்து எழும் அன்பு, அறிவுணர்வு, புத்தி, அமைதி, சந்தோஷம், படைப்பூக்கம் அனைத்தும் என் பிரதிபலிப்புகள்தாம். என்னை அறிந்துகொள்ளாமல் இவை எவற்றையும் நீ தெரிந்துகொள்ள முடியாது. இப்போது உலகில் இவையெல்லாம் பொய்ப்பிம்பங்களாக உலவுகின்றன. உண்மையறிவு விழித்துக்கொண்டால்தான் இன்று உலகில் இருக்கும் துன்பம் எல்லாவற்றுக்கும் நிரந்தரமான தீர்வு வரும்...

ஓம் ஸ்ரீ சாயீராம்...🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...