ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்....🙏🏻🙏🏻
உண்மையை உணரவே போராடுகிறேன்...???!!!
இறக்கும் தருவாயில் பிராணனைப் புருவ மத்தியில் நிறுத்தி வைத்து ஒளிமயமான என்னை தியானிப்பவன் என்னையே வந்தடைகின்றான். எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனதை உள்ளத்தில் நிறுத்தி உயிரைத் தலையின் உச்சியில் நிலை நிறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று, ஓம் என்ற ஒற்றைப் பிரம்ம எழுத்தை ஜபித்துக் கொண்டு என்னையே துதித்துக் கொண்டிருக்கும் நிலையில் உடலைத் துறப்பவன், பரமகதி பெறுகின்றான்”“என்னைத் தவிர வேறு எந்த ஒன்றிலும் தன் சித்தத்தைச் செலுத்தாத பக்தன் நித்திய நிரந்தரமான என்னையே சிந்தித்து வாழ்வதால், என்னிடமே எப்போதும் ஈடுபட்டிருக்கின்ற இந்த யோகிக்கு நான் எளிதில் கிட்டுகிறேன்.”
“இப்படி எந்த மகாத்மாக்கள் என்னிடம் பேரன்பு கொண்டு என்னையே புகலாகக் கொண்டு என்னோடு இணைகிறார்களோ அவர்களுக்கு அழிவுள்ளதும், துயரங்களுக்கு இருப்பிடமானதுமான மறுபிறவி ஏற்படுவதில்லை...!” என்றெல்லாம் ஸ்ரீ கிருஷ்ணர் அழியாத பிரம்ம தத்துவத்தின் சிறப்பையும், அதைத் தானாக அறிவதனால் உண்டாகும் நன்மையையும் அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கின்றார். இந்நிலையில் அர்ச்சுனன் அத்தகைய யோகத்தைச் சாராத ஜீவனின் நிலை என்ன...? என்று வினவுகின்றான்.
“என்னில் சித்தத்தை வைக்காமல் உலக நினைவுகளுடன் ஆசாபாசங்களுடன் உடலை விட்டுப் பிரிகின்ற ஜீவன் என்னை அடையாமல் தங்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப வேறு வேறு உலகங்களை அடைந்து பிறகு மீண்டும் மழை மூலமாக பூமியை அடைந்து பிறக்கின்றன.”ஜீவன் என்னென்ன ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாமற் போனதோ அதற்குரிய பிறப்பையே அவை அடைகின்றன. உடலின் மிருக இச்சையைத் தீர்க்கின்ற அந்த வாழ்க்கைக்காகக் கீழ் மட்ட நிலைப் பிறப்பிற்கே போய்விடும். இப்படிப் புலனின்பங்களில் ஆசை இருக்கும் மட்டும் பிறப்பு இருந்துதான் தீரும். மாறி மாறி, மாறி மாறிப் பிறந்து இறக்கத் தான் வேண்டும்.”
இந்த உண்மையை அறிந்து, ஏற்பட்ட சிந்தனை மாற்றத்தால் நான் அவன் என்பதையே தொடர்ந்து தியானித்துக் கொண்டிருந்தால் இறக்கும் தருவாயில் நமக்கு இயல்பாகவே அந்த இறை சிந்தனை ஏற்பட்டு, அவனையே அடைந்து விடுவோம். இதை அறிந்தவராய்த்தான் நம் முன்னோர், நான் மறக்கினும் என் நா மறக்காத நாமம் நமசிவாயவே...! என்று சொல்லியிருக்கின்றனர். மூச்சுக் காற்றின் ஓட்டத்தையே ஸோஹம்...! என்ற ஒலியாகக் கேட்கப் பழகி நான் அவன்...! என்ற உணர்வைத் தமக்குள் உருவேற்றியிருக்கின்றனர். இவ்வாறு மிகப்பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம்...
ஓம் நமசிவாய....🙏🏻🙏🏻
ஓம் ஸ்ரீ சாயீராம்..🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக