ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ..🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபகவான் உபதேசித்த பொன்மொழிகள்...🙏🏻🙏🏻
உங்களுக்குத் தெரியுமா....?
போன தலைமுறை வரையிலுமே கூட நம் பெரியவர்கள், அதாவது ஆன்மீக நெறிமுறையில் பக்திபூர்வமாகப் பற்றற்று வாழ்ந்தவர்கள், தங்கள் இறப்பைப்பற்றி முன்னரே அறிந்து வைத்திருந்தனர் என்பது! மகாபாரதத்தில் துரோணர், பீஷ்மர் போன்ற சான்றோர்களுக்குத் தங்கள் மரணம், அது நிகழும் காலம், நிகழும் விதம் போன்ற எல்லாமே தெரிந்திருந்தது.
ஏன், பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலும் கூட இத்தகைய தீர்க்கதரிசிகள் நம் சமூகத்தில் வாழ்ந்திருந்தார்கள். எனவே நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், வேதங்கள் சொல்லியபடி இவ்வுலகத்திலிருந்து நீங்கிச் செல்லும் வழிகள் இரண்டு. ஒன்று ஒளியின் வழி. மற்றது இருளில் செல்வது. ஒளியில் நீங்குபவன் மீண்டும் வருவதில்லை. இருளில் நீங்குபவன் மீண்டும் வருகிறான். ஆனால் இரண்டுமே நம் விருப்பப்படி அமைவதில்லை என்பதும் உண்மை.
இப்படி இந்த இரண்டு மார்க்கங்களைப் பற்றிய விபரங்களைக் குருவின் வாயிலாக நன்கு அறிந்துகொள்ளும் ஆன்ம சாதகர்கள் பிறகு இவ்வுலக வாழ்வில் மயங்கி ஈடுபடுவதில்லை. உலகியல் வாழ்வில் வாழ்கின்றபோதே எவ்விதப் பற்று, வெறுப்பு, ஒட்டுறவு என்று எதுவுமில்லாத நிலையில் இறைபக்தியிலேயே மனதைச் செலுத்தித் தாமரை இலைத் தண்ணீர் போல வாழ்ந்து வருகின்றனர்.
இப்படி ஆன்ம சாதனையில் ஈடுபட்டு இறைவனிடம் பக்தி செலுத்தி, செய்கின்ற செயல் அனைத்தையும் சேவையாகச் செய்பவர்களின் வாழ்வு தவம், யாகங்கள், தானங்கள், தத்துவங்கள் இவற்றிற்கெல்லாம் அப்பால் மேம்பட்ட உயர் உணர்வு நிலையில் அமைகின்றது. இறுதியில் அவர்கள் இருள் பாதையை விலக்கி, ஒளிப்பாதையில் குரு கிருபையாலும், இறையருளாலும் பயணித்து ஆதி நிலையாகிய பரமாத்மாவை அடைகின்றனர்...
ஓம் ஸ்ரீ சாயீராம்.. 🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய..🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக