🔥🔥ஶ்ரீசீரடி சாய்பகவான் ஆசியுடன் அன்னையர் தின நல்வாழ்த்து மடல்.🔥🔥
எமது அன்பிற்கினிய பெண் ஆதிச்சக்தி சொரூபமானவர்களே...இன்று அன்னையர் தின நன்னாளிள் உங்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.....உங்களின் உதிரத்தை பாலாக்க, உயர்ந்த பாலமுதை ஊட்டி, மிகுந்த சகிப்புத்தன்மையுடன் குழந்தைகளைப் போற்றி பாதுக்காத்து வளர்த்தப் பெருமை உங்களையேச் சாரும்....நீங்கள் அனைவரும் எந்த பலனும் எதிர்பாறாது மிகச்சிறந்த அம்மா , மனைவி,தாய், சகோதரி இவ்வாறாக பல பரிமானங்களை எடுத்தாலும்,எதிலும் தன்னை கனகச்சிதமாக பொருந்திக் கொண்டு சக்தி வாய்ந்த மனித உயிர்களை இந்த மண்ணில் பிரவேசிக்கச் செய்து, ஆகச்சிறந்த மனித உயிர்களை உமது கருவறையில் உருப்பெற வைத்தவள் என்பதை யான் நினைக்கும் போது அன்னையர்களாகிய உங்கள் அனைவரையும் வாழ்த்துவதில் யான் பெருமகிழ்வு கொள்கிறேன்... என் பெண் சக்திகளாகிய நீங்கள் அனைவரும் மேன்மேலும் புத்திசாதுர்யத்தோடு, விவேகத்தோடு, வைராக்கியத்தோடு, உங்களின் குழந்தைகளை பேணிக்காத்து நல்ல சமூக சீர்திருத்தவாதிகளாக உருபெற வைக்க வேண்டும் என்பதே என்னின் ஆவல்.....ஆகவே இந்த சிறப்பு வாய்ந்த நன்னாளிள் மிகுந்த தாய்மையுணர்வுடன் குழந்தைகளுக்கு
இறைப்பண்புகளைக் கற்பித்து உயர்ந்த மனிதர்களாக உருவாக்க வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கின்றேன்....வாழ்க பல்லாண்டு...வாழ்க ..வளர்க...மங்களம்..❤️❤️
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🙏
ஶ்ரீ சாயீ சர்வசக்தி சுயவிழிப்புணர்வு தியான பீடம்.. 🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக