ஓம் ஶ்ரீ சாயீநாதாய நமஹ....🙏🏻🙏🏻
ஶ்ரீசீரடி சாயீபாபாவின் உபதேச அருள்மொழிகள்...🙏🙏
🔥ஶ்ரீசீரடி பகவான் தன் ஆதி மூல சூட்சம பேராற்றலாள் அகல் விளக்கில், எவ்வாறு நீரினால் தீபம் ஏற்றினார் என்பதன் அனுபவ விளக்கம்.....🔥
மஒஒசூதியில் நிறைய விளக்குகள் ஏற்றுவதற்கு பகவான் விரும்புவாராம்...
பலகடைக் காரர்களையும் ஆவலோடு அணுகுவாராம் தினமும் இரந்து எண்ணெய் பெறுவாராம்....இதை விரும்பாத சிலர் ஒன்று கூடி எண்ணெய் கொடுக்க கூடாது என தீர்மானித்தனராம்....மற்றவரிடமும் எண்ணெய் தர மறுக்கவும் அறிவுருத்தினராம்...சாயீ எண்ணெய் தனக்கு மறுக்கப்பட்டதை அறிந்தாராம்...
சாயீ நேரே மசூதிக்குச் சென்றாராம்..கிணற்றடிக்குச் சென்று கைகால்களைக் கழுவிக்கொண்டாராம்..தகர குவளையில் நீர் நிரப்பிக்கொண்டாராம்.....அகல்களில் நீரை இட்டாராம்....விளக்குகள் யாவும் எரிய தொடங்கிற்றாம்...விளக்குகள் யாவும் எறிந்ததைக் கண்டோர் வியந்தனராம்...
எண்ணெய் மறுத்த வியாபாரிகள் அச்சம் கொண்டனராம்.....பகவான் "நீங்கள் எண்ணெய் தர மறுத்தால் தவறில்லை என்று கூறினாராம்...ஆனால் இருந்தும் இல்லை என பொய் உரைத்தது தவறு” என்றாராம்...எளிமையின் இருப்பிடமான சாய் பகவானை அனைவரும் துதிப்போம்..
ஓம் ஶ்ரீ சாய்ராம்...🙏🏻🙏🏻
ஶ்ரீசாயீ சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக