ஸ்ரீசாயீ

ஸ்ரீசாயீ
குருவே சரணம் குருவின் திருவடியே சரணம்

சனி, மே 08, 2021

🔥🔥பகவான் அனைவரையும் பேதமின்றி நேசித்தார் என்பதற்குச் சான்றாக, தன் ஆத்ம பக்தன் பாகோஜியை எவ்வாறு வழிநடத்தினார் என்பதன் விளக்கம்... 🔥🔥

 ஓம் ஶ்ரீ  சாய்நாதாய  நமஹ....🙏🙏🙏

ஶ்ரீசீரடி  சாய்பாபாவின் உபதேச  பொன்மொழிகள்..🙏🙏🙏

🔥பகவான் அனைவரையும் பேதமின்றி நேசித்தார் என்பதற்குச் சான்றாக,  தன் ஆத்ம  பக்தன்  பாகோஜியை  எவ்வாறு  வழிநடத்தினார் என்பதன் விளக்கம்.. 🔥

பகவான் தினமும் லெண்டிக்கு (தோட்டம்) நீர் ஊற்ற செல்லும் பொழுது, பாகோஜி அவருக்கு குடை பிடித்துக்கொண்டே செல்வார்... உடலெங்கும் குஷ்டரோகத்தினால் ஏற்பட்டு புண்கள் நிறைந்திருந்தன..; இருந்தபோதும் பகவான்  அணுகத்தகுந்த தொண்டர்களில் முதல்வர் பாகோஜி என்பவரே..பின்னர் அவர் பாபாவின் அருளால் பரிபுரணமாக குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.... 

சீரடி பகவான் கூறுகின்றார்...நானும் கூட என்னிடம் வருகின்ற சாந்தியற்ற  மனத்தை உடையவர்களுக்கு நல்ல கதைகளை சொல்லுகிறேன், லீலைகளை செய்துக் காட்டுவேன்..அது ஒரு ஆனந்தம்...தாய்க்கு சிறுவனின் விஷயத்தில் இருக்கும் சுயநலமே என்னிலும் இருக்கும்....

பாபாவுக்கு தோதீ-போதி (யோகசாதனை) தெரிந்திருந்தது...எவரும் அறியாமல் ஏதாவதொரு மறைவிடத்திற்கு சென்று குளியலை முடித்துவிட்டு, குடல்களை (வாய்வழியாக) வெளியே கொண்டு வருவார்..... பிறகு குடலை நன்றாக கழுவி உலர்வதற்காக தொங்கவிடுவார்... 

இந்த  பந்தம்  நிரந்தரமாக இருக்க  வேண்டுமானால் வேறுமார்க்கம்  இல்லை... நீங்கள் என்னை பரிபுரணமாக  நம்புங்கள்.... ஒளிவு, மறைவு விளையாட்டுகள் என்னிடம் வேண்டாம்...யாருடைய இதயக் கதவுகள் எனக்காக திருந்துள்ளனவோ, அவர்களுடைய இதயத்தில் நானே நிறைந்திருப்பேன் என்பதை அறிவீர்களாக....

ஶ்ரீசீரடி சாய்பாபா....🙏🙏🙏

ஶ்ரீசாயீ  சர்வசக்தி சுய விழிப்புணர்வு தியான பீடம்...🙏🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது.

ஓம் ஸ்ரீ சாயீநாதாய நமஹ...🙏🏻🙏🏻 அறிவதற்கு அரியதான ஜீவன், ஈசன், ஜகத் ஆகியவை பற்றி வேதாந்தம் விளக்கிக் கூறுகின்றது. ஆத்ம அனுபூதி அடைந்த ரிஷி...